Header image alt text

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாயக ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் சுமத்தப்பட்டது. புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கத்துடன் பிரதம மந்திரி பதவியை ஏற்குமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கி குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ். வைத்தியசாலை வீதியிலுள்ள வீடொன்றில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராசநாயகம் லீலாவதி என்ற குடும்ப பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கேபிள் வயரினூடாக மின்சாரம் பாய்ந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.