யாழ். குப்பிளான் தாயகம் கல்வி நிலையத்தின் வாணிவிழா-2018 நிகழ்வு இன்று (20.10.2018) மாலை 3மணியளவில் தாயகம் முன்றலில் தாயகம் கல்வி நிலையத்தின் நிர்வாக இயக்குநர் திரு. றயந்தன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய அதிபர் க.கராளசிங்கம் ஆகியோரும், கௌரவ விருந்தினராக கன்னிமார் கௌரி அம்பாள் ஆலயத்தலைவர் சோ.பரமநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more