யாழ். சுன்னாகம் தபால் நிலையத்திற்கான புதிய கட்டிடம் அமைப்பது சம்பந்தமான கூட்டம் இன்றுமாலை 4மணியளவில் சுன்னாகம் நகர அபிவிருத்தி சங்கத் தலைவர் குமாரவேல் அவர்களின் தலைமையில் சுன்னாகம் தபாலகத்தில் இடம்பெற்றது.
இதில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், யாழ். பிராந்திய அஞ்சல் அதிபர் திருமதி மதுமதி வசந்தகுமார், சுன்னாகம் தபால் நிலைய தபாலதிபர் திருமதி ராஜராஜன், வலிதெற்கு பிரதேச சபைத் தவிசாளர் தர்சன், சபா புஸ்பநாதன், பேரின்பநாயகம் உள்ளிட்ட சுன்னாகம் நகர அபிவிருத்திச் சங்க அங்கத்தவர்கள், யாழ். மாநகரசபை உறுப்பினர் தர்சானந்த், முன்னாள் வலிவடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வராஜா, யுகராஜ் மற்றும் தபால்நிலைய அலுவலர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். Read more