Header image alt text

சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் யாழ். கைதடியில் அமைந்துள்ள வட மாகாணசபை கேட்போர் கூடத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது உண்ணாவிரதம் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகள் தொடர்பிலும், தொடர்ந்து 29நாட்களாக அவர்கள் உண்ணாவிரதமிருப்பதால் அவர்களுக்கு ஏற்படக்கூடிய நிரந்தர உடல் பாதிப்புகள் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டதோடு, உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு அரசியல் கைதிகளிடம் போதகர் சக்திவேல் அவர்களின் ஊடாக கேட்பதோடு, வெளியே இருக்கக்கூடிய சிவில் சமூகம் அவர்களின் சார்பில் இப்போராட்டத்தை முன்னெடுத்து அவர்களின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது. Read more

புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 2.15மணியளவில் யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள வட்டு சுப்பிரமணியம் வித்தியாசாலைக்கு விஜயம் செய்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் திரு. கோகுலவாசன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கமைய பாராளுமன்ற உறுப்பினரின் பிரதேச இணைப்புச் செயலாளரர் அ.கௌதமனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த விஜயத்தின்போது பாடசாலையின் அதிபர் பாடசாலையைக் காண்பித்து அங்குள்ள குறைபாடுகளை பாராளுமன்ற உறுப்பினரிடம் எடுத்துக் கூறினார். இக் றைபாடுகள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுப்பதற்கு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதன்போது தெரிவித்தார்.
Read more

யாழ். வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள யா.வட்டு கார்த்திகேய வித்தியாலயத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் இன்றுபிற்பகல் 1.45மணியளவில் பல் ஊடக எயிறி (multimedia Projector) உள்ளிட்ட உபகரணங்களை பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பாராளுமன்ற உறுப்பினருக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.சசிதரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற ஆசிரியர் மனோகரன்;, பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், Read more