மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்றுகாலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்காவின் புளோரிடாவுக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று (23) காலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. Read more