Header image alt text

மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்றுகாலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் கார்பன் பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்காவின் புளோரிடாவுக்கு கொண்டு செல்லும் வகையில் இன்று (23) காலை மன்னார் நீதிமன்றத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. Read more

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசமைப்பு வரைபில் குறிப்பிடப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பதை தான் எதிர்க்கமாட்டேன் என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று அரசமைப்பு வரைபு தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மஹிந்த மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அரசமைப்பு வரைபுக்கு எதிர்ப்பைப் போல அரசமைப்பு திருத்தங்களுக்கும் எதிர்ப்பு இல்லையென்பதை தெளிவாக குறிப்பிடுகின்றோம். தற்போதைய அரசமைப்பில் விரிவான மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது.

முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நாளைய தினம் பௌத்த பிக்கு மற்றும் பிள்ளையார் ஆலயத்தினருக்கும் முல்லைத்தீவு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைக்கபட்டுள்ளது. இந்தநிலையில் இன்று புத்தர் சிலை திறக்கப்படுவதை அறிந்து செய்தி சேகரிப்புக்காக சென்ற ஊடகவியலாளர் ஒருவருக்கு குறித்த விகாரை பிக்குவாலும் புல்மோட்டை அரிசிமலையிலிருந்து வருகைதந்த பிக்குகளாலும் இடையூறு ஏற்படுத்தபட்டது. Read more