Header image alt text

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இன்று மன்னாரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்ததோடு, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பியுள்ளனர்.

மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்றுகாலை 10 மணியளவில் மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் ஊர்வலம் ஆரம்பமாகி மன்னார் மனித புதை குழி அகழ்வு பணிகள் இடம் பெறும் பகுதியை வந்தடைந்தது. Read more

வவுனியா, நெளுக்குளம், காத்தான் கோட்டம் பகுதியில் இடம்பெற்ற, அமரர்கள் நினைவான 22 வது ஆண்டு விளையாட்டுப் போட்டி இறுதி நிகழ்வுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பின் ஜேர்மன் கிளை நிதி உதவி –

வவுனியா மாவட்டத்தில் நெளுக்குளம் பிரதேசத்தை அண்டி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) அமைப்பினரால் ஏற்படுத்தப்பட்ட ‘காத்தான் கோட்டம்’ பகுதியில் இடம்பெற்ற, அமரர்கள் நினைவான 22வது வருடாந்த விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுக்கு, புளொட் அமைப்பின் ஜேர்மன் கிளை உறுப்பினர்களால் ரூ 40,000/- நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. Read more

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் மட்டக்களப்பு மாவட்ட பணிமனை 24.02.2019 அன்று கட்சித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந் நிகழ்வின் போது, ‘புலம்பெயர்ந்து வாழும் கழக உறுப்பினர்களின் உதவித் திட்டத்தின்’ கீழ் கழக ஜேர்மன் கிளை உதவியாக கழக உறுப்பினர்கள் மூவரினது பிள்ளைகளுக்கு மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இரத்தினம் சின்னையா ( கலிபர் ), இளையதம்பி சண்முகம் ( பவன் ), கதிர்காமத்தம்பி சுந்தரலிங்கம் ( சுரேஷ் ) ஆகியோருடைய பிள்ளைகள் மூவரினது கல்விச் செயற்பாடுகளுக்கு உதவும் வகையில் மேற்படி மிதிவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
இம் மிதிவண்டிகளுக்கான நிதியினை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ( புளொட் ) இன் ஜெர்மன் கிளை அமைப்பாளர் திரு. நல்லதம்பி பவானந் அவர்கள் வழங்கியிருந்தார்.
Read more

யாழில் இயங்கும் ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டு தேடப்பட்டு வரும் பிரதான சந்தேகநபர்களின் ஒருவரான சன்னா என அழைக்கப்படும் பிரசன்னாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.
யாழ்.மானிப்பாய் கட்டப்பாலி ஒழுங்கையில் உள்ள குறித்த வீட்டின் மீது நேற்று முன்தினம் (24) ஞாயிற்றுக்கிழமை மாலை தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. Read more

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் என நம்பப்படும் கறுப்பு சட்டை அணிந்த சிலர் போராட்டத்தை குழப்பும் நடவடிக்கையில் ஈடுபட்டத்துடன், ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்களை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (25) திங்கட்கிழமை போராட்டத்தை முன்னெடுத்தனர். Read more

கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் இன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வை முன்னிறுத்தியும் வடகிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று (25) திங்கட்கிழமை கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் பெருமளவான மக்கள் திரண்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். Read more

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 40 ஆவது கூட்டத் தொடர் இன்று (25) ஜெனீவாவில் ஆரம்பமாகிறது.

மார்ச் மாதம் முதலாம் திகதி வரையில் இந்த கூட்டுத் தொடர் இடம்பெற உள்ளது.

2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் இந்த கூட்டுத் தொடரின் போது கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இலங்கை தொடர்பில் மேலும் பல அறிக்கைகளும் முன்வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், திங்கட்கிழமை (25), வடமாகாணம் முழுவதும் முன்னெடுக்கப்படவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஜனநாயக மக்கள் முன்னணியும் ஆதரவு வழங்கியுள்ளன.
இந்த ஹர்த்தாலுக்கு, பல தரப்பினரும் ஆதரவு வழங்க முன்வந்த நிலையிலேயே, தற்போது, தமிழ் தலைமைகளும் ஆதரவு வெளியிட்டுள்ளனர். Read more

அரசியலமைப்பு பேரவையில் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைவாகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.
அரசியலமைப்பு பேரவையில் சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள், ஜனாதிபதியின் பிரதிநிதிகள், மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதிகள் ஆகியோரே தற்போதுள்ளதாக மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இவர்களைத் தவிர, சமல் ராஜபக்ஸ இருந்ததாகவும் அவரும் இராஜினாமா செய்துவிட்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார். Read more

நான்கரை வருடங்கள் ஆகியும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
லங்கா சம சமாஜக் கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண யாழ். ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வு கண்டு, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதியளித்துள்ளது. Read more