Header image alt text

நெடுங்கேணி மாமடு சந்தி (முல்லைதீவு மாவட்டம்) வெள்ளை பிள்ளையார் ஆலய கற்பக அறநெறி பாடசாலையின் முதலாம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு (20.01.2019) இன்று ஆலய பரிபாலன சபையின் தலைவர் திரு .S சுபாஸ்கரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திருமதி .சாந்தி ஸ்ரீகந்தராஜா ,கௌரவ .DR .சிவமோகன் ,முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் , பிரதேச சபை உறுப்பினர் திரு .சத்தியசீலன் ,ஒட்டிசுட்டான் செயலக கலாச்சார உத்தியோகத்தர் திரு .மோகன் ,அறநெறி பாடசாலையின் ஒருங்கிணைப்பாளர் திரு . சுகந்தன் , ஆலய பரிபாலன சபையின் பொருளாளரும் ,காப்பாளருமான திரு .தர்மலிங்கம் மற்றும் அயல் பாடசாலைகளின் அதிபர்கள் ,அறநெறி பாடசாலையின் ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் ,ஊடகவியலாளர்கள் ,மாணவர்கள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் . Read more

யாழ். தென்மராட்சி பிரதேசத்தின் சிறந்த இளைஞர் கழகங்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2019) முற்பகல் தென்மராட்சி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்மராட்சி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் அனுராஜ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், சாவகச்சேரி உதவி பிரதேச செயலாளர் செல்வி வினோஜிதா, சாவகச்சேரி பிரதேசசபை உப தவிசாளர் மயூரன், சாவகச்சேரி நகரசபையின் உப தலைவர் பாலமயூரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தார்கள். Read more

புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கிராம எழுச்சித் திட்டத்தில் தனது விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் 10லட்சம் ரூபாவில் போடப்பட்ட கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான அயல் வீதியினை இன்றுபிற்பகல் (20.01.2019) சென்று பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், பிரதேச சபை உறுப்பினர்கள் இ.கெங்காதரன், அகீபன் மற்றும் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனிமுருகன் தேவஸ்தான குருக்கள், ஆலய நிர்வாகத்தினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டிருந்தார்கள். Read more