Header image alt text

யா. மட்டுவில் சந்திர மௌலீச வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டீ வித்தியாலய முதல்வர் கந்தசாமி எழில்அழகன் அவர்களின் தலைமையில் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.30மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் அவர்களும், கௌரவ விருந்தினர்களாக கோப்பாய் உதவிப் பிரதேச செயலர் திருமதி சஞ்சீவன் ராதிகா, தென்மராட்சி உடற்கல்வி, வலயக்கல்வி அலுவலக ஆசிரிய ஆலோசகர் ந.ஸ்ரீகாந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப நிகழ்வாக விருந்தினர்கள் கௌரவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசையோடு விழா மேடைக்கு அழைத்துவரப்பட்டு மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. Read more

யாழ். நிலாவரைச் சந்தி புத்தூரில் தவலிங்கம் தனுசன் என்பவரது சரண்யா வைண்டிங் என்னும் மின்னியல் சாதனங்கள் திருத்தும் நிலையம் இன்று (21.01.2019) திங்கட்கிழமை பிற்பகல் 1.00மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் புளொட் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், கோப்பாய் பிரதேசசபை உறுப்பினர் இராசேந்திரம் செல்வராஜா ஆகியோர் கலந்துகொண்டு நிலையத்தினை திறந்துவைத்தார்கள். Read more