ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் சிங்கப்பூர் ஜனாதிபதி ஹலிமாஹ் யாகூபுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இன்றுகாலை இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.
இரண்டுநாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேறகொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று சிங்கப்பூர் நோக்கி பயணமானார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் அடிப்படைச் சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் தரத்தை உயர்த்துவதற்காக 200 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளது.