சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு விரிவான, புதிய ஒத்துழைப்புகளை வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதி ஆகிய இருவரும் இணங்கியுள்ளனர்.
இலங்கையின் 71ஆவது தேசிய தின விழாவின் விசேட அதிதியாக இலங்கை வந்துள்ள, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பூர்வமாக வரவேற்றப்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டம் தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதி தமது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். Read more
சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராக மீண்டும் பீ.எல்.எல்.எஸ். சார்ள்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த சார்ள்ஸை அப்பதவியிலிருந்து நீக்கிவிட்டு, அப்பதவிக்கு ஓய்வுப்பெற்ற கடற்படை அதிகாரியொருவரை நியமிக்க கடந்த வாரம் அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அமைச்சரவையின் இந்த யோசனைக்கு கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பை வெளியிட்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வைத்தியசாலையின் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.