 சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு விரிவான, புதிய ஒத்துழைப்புகளை வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதி ஆகிய இருவரும் இணங்கியுள்ளனர்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு விரிவான, புதிய ஒத்துழைப்புகளை வழங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாலைதீவு ஜனாதிபதி ஆகிய இருவரும் இணங்கியுள்ளனர். 
இலங்கையின் 71ஆவது தேசிய தின விழாவின் விசேட அதிதியாக இலங்கை வந்துள்ள, மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பூர்வமாக வரவேற்றப்போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன் போதைப் பொருள் ஒழிப்பு விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ள விசேட வேலைத்திட்டம் தொடர்பில் மாலைத்தீவு ஜனாதிபதி தமது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார். நீண்டகால நட்புறவு நாடுகளான மாலைத்தீவு- இலங்கைக்கிடையிலான உறவை பலப்படுத்தவும் வர்த்தக, சுகாதாரம், பாதுகாப்பு, கல்வி, கடற்படைத்துறை உள்ளிட்ட விடயங்களில் இரு நாடுகளுக்கிடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பித்தல், புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்திக்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது இருவருக்கிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
