இலங்கை அரசாங்கம் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் முக்கியமான அடிகளை எடுத்து வைத்திருப்பதாக கனடா தெரிவித்துள்ளது. கனடாவின் ஆசிய பசுபிக் வலயத்துக்குப் பொறுப்பான பூகோளவிவகார அமைச்சர் கலாநிதி டொனால்ட் பொபயாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகத்தில் இலங்கையின் சுதந்திரத் தின நிகழ்வு இடம்பெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார். இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.