Posted by plotenewseditor on 3 February 2019
Posted in செய்திகள்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட கிராஞ்சியில் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகள் 80பேருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இலண்டனில் வதியும் திரு. தர்மலிங்கம் நாகராஜா(பொக்கன்) அவர்கள் இதற்கான நிதியுதவியினை வழங்கியிருந்தார்.
கிராஞ்சி அ.த.க பாடசாலை மைதானத்தில் நேற்றுமுன்தினம் (01.02.2019) நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொருளாளரும், வடமாகாண முன்னாள் விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்) கொடையாளி த.நாகராஜா, கட்சியின் தேசிய அமைப்பாளர் த.யோகராஜா(யோகன்)பிரதேச சபை உறுப்பினர்), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் வே.சிவபாலசுப்பிரமணியம், க.மகேந்திரன், தொண்டர் அமைப்பின் பிரதிநிதி யசோதரன், வேரவில், கிராஞ்சி பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
Read more