 சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம், அசௌகரியங்களைக் குறைப்பதற்கான நடவடிக்ககைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் குடிவரவு மற்றும் குடியகல்வு நடவடிக்கையின் போது எற்படும் காலதாமதம், அசௌகரியங்களைக் குறைப்பதற்கான நடவடிக்ககைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். 
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விசேட கூட்டத்தில் மேலும் அவர் கருத்து தெரிவிக்ககையில், ‘தற்போது எமது சர்வதேச விமான நிலையத்தில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் மிக முக்கியமானதும் முதன்மையானதாகவும் உள்ள பிரச்சினையானது பயணிகளது குடிவரவின் போது ஏற்படும் நெரிசல் மற்றும் காலதாமதமாகும். Read more
