கிளிநொச்சி கனகபுரம் வீதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வரதராஜா ஜெமினன்(23வயது) செல்வநாயகம் அஜிந்தன் (29வயது) ஆகியோரே பார ஊர்தியுடன் மோதுண்டதால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பாரஊர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன். கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்