வவுனியா, மகாறம்பைகுளம் புளியடி பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து மூதாட்டி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை குறித்த மூதாட்டியை காணாததால் உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது வீட்டிற்கு அண்மையில் உள்ள விவசாய கிணறு ஒன்றில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அன்னலட்சுமி (வயது 85) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் தவறி கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.