ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)இன் வவுனியா மாவட்ட பொதுமக்கள் இணைப்பு அலுவலகம் எதிர்வரும் 28.01.2020 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு,
கோவில்குளத்தில் அமைந்துள்ள செயலதிபர் நினைவில்லத்துக்கு அருகாமையில் உள்ள கட்டிடத்தில் திறந்து வைக்கப்படவுள்ளது.
2020 ஜனவரி 3 ஆம் திகதி இலங்கைக்கு வந்த சீன மக்கள் குடியரசின் கடல்சார் ஆராய்ச்சி கப்பலான சியாங் யோங் ஹாங் 06 தற்போது இலங்கையின் கடற்பரப்பு மற்றும் நீர்நிலைகளில் நுண்ணுயிர் வாழ்க்கை குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
சீனாவிற்கு விஜயம் செய்யும் இலங்கையர்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
பயங்கரவாத விசாரணை பிரிவு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நுவன் வெதசிங்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2 அல்லது 3 மாதங்களுக்குள் ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் 51 ஜெலக்னெட் வெடிமருந்து குச்சிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.