உலகளாவிய ரீதியில் உயிர் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றுமொரு நபர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளார்.

இவர் இன்று முற்பகல் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த நபர் தற்போது கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன நாட்டைச் சேர்ந்த குறித்த நபர் சுகயீனம் மற்றும் இருமல் காரணமாக சிகிச்சைப் பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலைக்கு வருகைத் தந்திருந்த சந்தர்ப்பத்தில், இவரை சோதனைக்கு உட்படுத்திய போதே கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்குது.