மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவந்த குடும்பஸ்தர் ஒருவர் மாடியில் இருந்து குதித்து உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வாழைச்சேனை, கருணைபுரத்தினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை பிள்ளையான் (64 வயது) என்பவரே இவ்வாறு குதித்து உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 9 வருடங்களாக புற்று நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.