Header image alt text

இலங்கையில் கொரன்னா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் தேசிய செயற்பாட்டு குழு ஒன்றை அமைக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதற்கமைய பின்வருவோர் அடங்கிய குழுவை சுகாதார அமைச்சர் நியமித்துள்ளார்.

1.ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரியர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே
2.பத்ரானி ஜயவர்தன, சுகாதார செயலாளர்.
3. டொக்டர் அனில் ஜசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்.
4. மேலதிக செயலாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ். Read more

வெளிநாடுகளுக்கான அனைத்துக் குழுக்களின் விஜயங்களையும் நாளை தொடக்கம் இரத்துச் செய்வதற்கு சீன வெளிநாட்டு முகவர் நிலையங்கள் தீர்மானித்துள்ளன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக சீன அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

வூஹான் மாகாணத்தின் அதிகாரிகள் இது தொடர்பில் குறிப்பிடுகையில், இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரில் 230 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more

சீனாவில் உள்ள இலங்கையர்கள் சிலரை இந் நாட்டுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பேஜிங் தலைநகரத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகத்தின் வர்த்தக அலுவல்கள் தொடர்பான தலைமை அதிகாரி எலக்ஷி குணசேகர இது தொடர்பாக தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவாத இடங்களில் உள்ள இலங்கையர்களே இவ்வாறு அனுப்பிவைக்கப்படவிருப்பதாக தெரிவித்தார். Read more

கொரானா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் உள்ளிட்ட மூன்று பேர் கொழும்பு ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றையதினம் சுகயீனமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. குறித்த இரண்டு பேருக்கும் கொரொனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பது குறித்து Read more

கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சீன ஜனாதிபதி சி ஸிங் பிங் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் விசேட கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் அவர் இதனை கூறியுள்ளார்.

இதனால் சீனா கடுமையான நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. Read more

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சீனாவில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கைக்கான தூதரகம் அறிவித்துள்ளது.

இதன்படி கொரோனா வைரஸால் அதிக பாதிப்புக்குள்ளான சீனா உகான் நகரில் உள்ள 32 இலங்கையர்களே மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. Read more

கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. Read more

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று சுமார் ஒரு மணித்தியாலம் வரையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பு சாட்சியம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பிலேயே அவர் இவ்வாறு சாட்சியமளிக்க சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட அவர், சாட்சியமளித்தப் பின்னர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியுள்ளார்.

கிளிநொச்சி-முரசுமோட்டை பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதுண்டதாலே குறித்த விபத்து இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more

கொழும்பு வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் உள்ள இருமாடி குடியிருப்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தீ விபத்தில் வீட்டினுள் இருந்த 79 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவலை-கல்கிசை மாநகர சகையின் தீயணைப்பு படையினர் தீயை கட்டப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர். Read more