புதுச்சேரியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இந்திய மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக புதுச்சேரியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுக நிர்மாணத்திற்கான கள ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.