 எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி தரம்பு 05 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 13ஆம் திகதி தரம்பு 05 புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைகள் செப்டெம்பர் 07ஆம் திகதி முதல் ஒக்டோபர் 02ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது.
மேலும், எதிர்வரும் ஜூலை 06ஆம் திகதி முதல் நாட்டிலுள்ள பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக ஜூன் 29ஆம் திகதி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்காக பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன.
இரண்டாம் கட்டமாக, தரம் 05 – 11 – 13 ஆகிய மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் ஜூலை 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
நான்கு கட்டங்களாக பாடசாலை நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
