Header image alt text

மலர்வு- 20.10.1940 உதிர்வு-20.06.2020

மன்னார் நானாட்டான் கட்டைக்காட்டை பிறப்பிடமாகவும் முருங்கன்பிட்டி கன்னாட்டியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. மனுவேல் மரியம்மா அவர்கள் நேற்று (20.06.2020) சனிக்கிழமை காலமானார். இவர் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மன்னார் மாவட்ட முன்னாள் இராணுவ பிரிவு பொறுப்பாளர் அமரர் பெஞ்சமின் (தோழர் செல்வம்) அவர்களின் தாயார் ஆவார். Read more

289 பேர் நாடு திரும்பல்-

Posted by plotenewseditor on 21 June 2020
Posted in செய்திகள் 

இலங்கைக்கு வருகைதர முடியாமல் ஆபிரிக்க நாடுகளில் தங்கியிருந்த 289 இலங்கையர்கள், இன்று (21) அதிகாலை, இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.  மடகஸ்கார், மொசம்பிக், உகண்டா, கென்யா, ருவன்டா, டென்சானியா ஆகிய நாடுகளில் ஹோட்டல் துறையில் பணியாற்றுவதற்குச் சென்றிருந்தோரே, இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான எவரும் நேற்று (20) பதிவாகவில்லையென, தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் 1950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி தொற்றாளர்களிடையே 1472 பேர்  குணமடைந்து வீடு சென்றுள்ள நிலையில்,  467 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் மணல் கொண்டு சென்ற வாகனம் மீது படையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் உயிரிழந்துள்ளான். Read more

சூரிய கிரகணம் இன்று-

Posted by plotenewseditor on 21 June 2020
Posted in செய்திகள் 

சூரிய கிரகணம் இன்று (21) காலை 10.16 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்குகிறது.  இந்த கிரகணம் முழு நெருப்பு வளையம் போன்ற உச்சம் அடையக் கூடிய நேரம் காலை 11.49 மணி என தெரிவிக்கப்படுகின்றது.

கிரகணம் நிறைவடையக் கூடிய நேரம் மதியம் 1.30 மணி என கிரகணம் 3 மணி நேரம் 14 நிமிடம் 24 விநாடிகள் வரை நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். அடுத்து டிசம்பர் 14 ஆம் திகதி நிகழும்.