Header image alt text

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  பங்களாதேஷில் இருந்து வந்த ஒருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

மேல் மாகாணத்தில் முக கவசம் அணியாத நபர்கள் ஆயிரத்து 280பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் மீண்டும் முகக்கவசம் அணியாவிட்டால் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் இலங்கைக்கு வரமுடியாமல், ஓமானில் தங்கியிருந்த 288 இலங்கையர்கள், இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்துள்ளனர்.  ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான யு.எல். 206 என்ற விமானம் மூலம் இன்று அதிகாலை 4.30 அளவில், இவர்கள் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர். இதேவேளை நேற்று இரவு 9.30அளவில் ஹொங்கொங்கிலிருந்து 26 இலங்கையர்கள் இலங்கை வந்துள்ளனர்.