நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 502 தொற்றாளர்களுள் 262 பேர் கொழும்பு நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனரென, கொரோனா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் வெள்ளவத்தையில் 23 தொற்றாளர்களும் கிருலப்பனையில் 28 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், புறக்கோட்டையிலிருந்து ஒருவரும் கொம்பனித்தெருவிலிருந்து 31 பேரும் கொள்ளுப்பிட்டிய-6, மருதானை-15, அளுத்கடை-42, புளுமென்டல்-19, கிரான்ட்பாஸ்-39, மட்டக்குளிய-42, தெஹிவளை-5, தெமட்டகொட-2 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.