புதியபாதை ‘ஊடாக புதிய சிந்தனையை தந்த சிந்தனை சிற்பி தோழர் சதாசிவம் சிவசண்முகமூர்த்தி(சுந்தரம்) 39வது நினைவுதினம் இன்றாகும்.
1982ம் ஆண்டு ஜனவரி மாதம் 2ம் திகதி சித்திரா பதிப்பகத்தில் வைத்து விடுதலைப் புலிகளினால் அரங்கேற்றப்பட்ட முதல் சகோதரப்படுகொலை கட்டவிழ்த்து விடப்பட்ட நாளும் இதுவாகும். Read more
தபால் ரயில் சேவை போக்குவரத்தில் ஈடுபடாமையாலும் இலங்கை போக்குவரத்து சபைக்குரிய பஸ்களை பயன்படுத்த முடியாமையாலும் கடிதங்களை விநியோகிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து வௌியேறிய 3,772 பேரை சேவையில் இணைத்துக்கொள்ளும் செயற்பாடு எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் காணப்படும் தற்போதைய நிலமைகள் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிவோரின் முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அனைத்து அரசியல் கைதிகளுக்கும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி, புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக திருகோணமலை நகரம் முடங்கியுள்ளது.
புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதுடன் தொடர்புடைய அளவுகோல்களை தயாரிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசேட கடன் திட்டம் நேற்று (01) முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேேற்று இரவு உறுதிப்படுத்தினார்.