பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரம சிங்கவுக்கும் இடையில் அவசர சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

தேசியப் பட்டியல் எம்.பியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதன் பின்னரே, இச்சந்திப்பு இடம்பெறுள்ளது. பாராளுமன்றத்தின் இரண்டாவது மாடியிலேயே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.