கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் மிகவும் துன்புற்றுக் கொண்டிருக்கும் நிலையில் மன்னார் மாந்தை மேற்கு (அடம்பன்)பிரதேசத்தின் சொர்ணபுரி, ஆண்டான்குளம், காத்தான்குளம், தாமரைக்குளம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தலில் உள்ள மற்றும் தெரிவுசெய்யப்பட்ட ஐம்பது குடும்பங்களுக்கு

கழகத்தின் பிரான்ஸ் கிளை தோழர்கள் மற்றும் ஆதரவாளர்களின் நிதியில் தலா ரூபாய் 1500 பெறுமதியான உலருணவுப் பொருட்கள் இன்று முற்பகல் வழங்கி வைக்கப்பட்டன.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் தோழர் கொன்சால், கட்சியின் மன்னார் மாவட்ட செயலாளர் தோழர் ஜேம்ஸ்,

கட்சியின் செட்டிக்குளம் பிரதேச சபை தவிசாளர் தோழர் சிவம், கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் தோழர் காண்டீபன், தோழர் இந்திரா ஆகியோர் உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தார்கள்.