Header image alt text

ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளைய தினம் (20) 24 மணித்தியால அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. Read more

பொது இடங்களுக்கு செல்லும் போது, கொவிட் தடுப்பூசி அட்டையை கொண்டு செல்வதை கட்டாயமாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, அறிவுறுத்தியிருந்தார். Read more

நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைவதாக  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார். Read more

கிளிநொச்சியில் இருந்து கதிர்காமத்துக்கு சுற்றுலா சென்ற பேருந்து இன்று (19) அதிகாலை பதியத்தலாவை பகுதியில் வீதியை விட்டு விலகி மோதிய விபத்தில் 17 படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். Read more

நகர சபை உறுப்பினர் சுந்தரலிங்கம் காண்டீபன் அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக தோழர் செல்வபாலன் லெனின் அவர்களின் முயற்சியில் உருவாக உள்ள புதிய வீதி. Read more

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் 2000 ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான சிறந்த தருணம் வந்துள்ளதாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அறிவித்துள்ளது. Read more

51,000 பயிற்சி பட்டதாரிகளை அரச சேவையில் நிரந்தரமாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்களுக்கான நியமனக் கடிதங்களை அடுத்தவருடம் ஜனவரி 3 மற்றும் ஏப்ரல் 1 ஆம் திகதிகளில் வழங்கவுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவில் பிரிதொரு நபருடன் இணைந்து கணவனை அடித்து கொன்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மற்றையசந்தேக நபரையும் பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். Read more

வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புதிய குடி நீர் இணைப்பிற்காகவும், உள்ளக அபிவிருத்திக்கு என விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புளொட் அமைப்பின் கனடா செயற்பாட்டாளர் தோழர் ராஜ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு தோழர் ராஜ் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முப்பதினாயிரம் ரூபாவினை
(ரூபா 30 000/-) புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களினால் இன்று வழங்கிவைக்கப்பட்டது. Read more