கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக நேற்று முன்தினம் மரணமெய்திய அமரர் தோழர் காண்டீபன் (கணபதி கேசவப்பிள்ளை) அவர்களின் குடும்பத்திற்கு ரூபாய் 20,000/= நிதியுதவி இன்று 11.08.2022 வழங்கிவைக்கப்பட்டது. Read more
காலிமுகத்திடல் போராட்டம் தொடர்பில் சமூக ஊடகங்களில் கருத்து வெளியிட்ட பிரித்தானிய பெண்ணான கெய்லி பிரேசருக்கு விசா வழங்குவதை நிறுத்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் முடிவு செய்துள்ளது. எனவே அவர் ஓகஸ்ட் 15 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டு வெளியேறுமாறு இலங்கையின் குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றனர். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் Prayut Chan-o-cha அறிவித்துள்ளார்.
03 முக்கிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை – சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடர்பான விடயங்கள் அவற்றில் உள்ளதாக நேற்று பிற்பகல் ஜனாதிபதியை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.