நாட்டில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவும் நிலை காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதன்படி, நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு ஏற்ப உயிரிழப்புகளும் அதிகரிக்கலாம் என தொற்றுநோயியல் துறையின் பிரதான தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சமித்த கினகே தெரிவித்தார். Read more
		    
வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற   இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் (24) குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைத்தீவு – வட்டுவாகல் கோட்டாபய கடற்படை முகாம் அமைந்த பகுதியிலுள்ள தமிழ் மக்களின் 617 ஏக்கர் காணிகளை அளவீடுசெய்து, கடற்படையினர் அபகரிக்க எடுத்த முயற்சி, காணி உரிமையாளர்களாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் இன்று (23) மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் இராமச்சந்திரன் சுரேன் தெரிவாகியுள்ளார். வல்வெட்டித்துறை நகர சபைக்கான தவிசாளர் தெரிவு, நகர சபை மண்டபத்தில் இன்று (23) இடம்பெற்றது. 
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் வசந்த முதலிகே, ஹசந்த குணதிலக்க மற்றும் வென் கல்வெவ சிறிதம்ம தேரர் ஆகியோர் தங்காலை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களிடம் குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை நடத்துகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது டுவிட்டர் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கு தேவையான பாதுகாப்பை வழங்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது 
எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் திருகோணமலை மாவட்ட நிர்வாகக் கூட்டம் கட்சியின் 10ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட உறுப்பினர்களால் தெரிவுசெய்யப்பட்ட மாவட்ட அமைப்பாளர் தோழர் மதியழகன் அவர்களின் தலைமையில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் அவர்களின் இல்லத்தில் (21/08/2022) மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. 
22.08.2006இல் திருகோணமலையில் மரணித்த தோழர் குமார் (முத்துலிங்கம் பாலச்சந்திரன்- திருமலை) அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….