Header image alt text

இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்குவதற்கான சாத்திக்கூறுகள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவித்துள்ளார். Read more

கடன் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காணும் இலங்கையின் முயற்சிகளுக்கு பரிஸ் கிளப் தனது முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். Read more

மன்னார் – மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான திகதியை அறிவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மன்னார் சதொச மனித புதைகுழி தொடர்பான வழக்கு மன்னார் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இவ்வாறு இன்று (17) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read more

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உள்ளிட்ட இலங்கையின் பிரதிநிதிகள் குழு, சர்வதேச நாணய நிதியத்தின்  பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கெஞ்சி ஒகாமுராவை சந்தித்துள்ளது.  சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. Read more

16.10.2018இல் வவுனியாவில் மரணித்த தோழர் ரமேஷ் (பெரியண்ணன் ஜெகதீஸ்வரன் – வவுனியா) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று….

நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான செயலகத்தை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கையும் தொடர்ந்து காலநிலை மாற்றத்தை எதிர்நோக்கும் நாடாக இருப்பதால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த அலுவலகம் நிறுவப்பட உள்ளது. Read more

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன “ஒன்றாக எழுவோம்” என்கிற தொனிப்பொருளில் இரண்டாவது மாநாடு நாவலபிட்டியில் இன்று (16) நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலபிட்டிக்கு வந்திருந்த நிலையில், மஹிந்தவுக்கு அங்குள்ள மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். Read more

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக கருதப்படும் தாமரை கோபுரம் மக்களிடம் கையளிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குள் கிடைத்த வருமானம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, இதுவரையில் 900 லட்சம் ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக தாமரை கோபுர தனியார் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். Read more

gமுன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியா தலைமையில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் “சுபீட்சமான நாட்டிற்கான பாதை நல்லிணக்கமே” எனும் தொனிப்பொருளில் நடாத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றபோது தலைவர் த.சித்தார்த்தன் (பா.உ) அவர்களும் பங்கேற்றிருந்தார். Read more

நான்கு இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்கள் வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளன. மின்சக்தி மற்றும் எரிசக்தி, வெகுசன ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், சுகாதாரம் ஆகிய இராஜாங்க அமைச்சுகளுக்கான விடயதானங்களே வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. Read more