பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள்இ பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 57 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தைஇ திறக்குமாறு வலியுறுத்தி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இன்று பிற்பகல் கல்வி அமைச்சுக்கு சென்றனர்.

இதன்போது கல்வி அமைச்சின் வளாகத்தில்இ அமைதியற்ற நிலை ஏற்பட்டதையடுத்து 56 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.