
Posted by plotenewseditor on 18 May 2023
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 17 May 2023
Posted in செய்திகள்
பேச்சுகள் தொடரும், ஆனாலும் பலன் கிடையாது?Posted by plotenewseditor on 17 May 2023
Posted in செய்திகள்
போராட்ட குழுக்கள் மீது கடந்த மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குழுவினருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று முழுமையாக நீக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஞ்சன ஜயரத்ன ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையும் நீக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 17 May 2023
Posted in செய்திகள்
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று(17) நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில், Read more
Posted by plotenewseditor on 16 May 2023
Posted in செய்திகள்
கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட காலத்தில் அவரை சதி செய்து, கொலை செய்ய குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது. கடந்த 2006 ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் திகதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக செயற்பட்ட கோட்டாபய ராஜபக்ஸவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி, குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கடந்த 2008 ஆம் ஆண்டு சிவலிங்கம் ஆரூரன் கைது செய்யப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 16 May 2023
Posted in செய்திகள்
XPress Pearl கப்பல் நட்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திலிருந்து அந்நாட்டின் சர்வதேச வர்த்தக நீதிமன்றுக்கு மாற்றுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தல் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால தீர்மானங்கள் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்ட பின்னர் சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படுமென சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. நட்ட ஈடு தொடர்பான வழக்கு நேற்று (15) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அந்நாட்டு நீதிமன்றம் இதனை தெரிவித்ததாக திணைக்களம் கூறியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 16 May 2023
Posted in செய்திகள்
புதிய பாராளுமன்ற செயலாளர் நாயகமாக குஷானி ரோஹனதீர நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில், இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையின் அனுமதியின் கீழ் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற பணிக்குழாமின் பிரதானியாகவும், பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளராகவும் குஷானி ரோஹனதீர கடமையாற்றியுள்ளார்.
Posted by plotenewseditor on 16 May 2023
Posted in செய்திகள்

Posted by plotenewseditor on 15 May 2023
Posted in செய்திகள்
வடக்கு, கிழக்கு மற்றும் வட மேல் மாகாணங்களுக்கான ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. குறித்த 3 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி நியமிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 15 May 2023
Posted in செய்திகள்
மாகாணங்களுக்கிடையில் சேவையில் ஈடுபடும் பஸ்களை உரிய இடங்களில் மாத்திரம் நிறுத்துவது தொடர்பான முன்னோடி வேலைத்திட்டமொன்று இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு முதல் காலி வரையிலான மார்க்கத்தில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா கூறினார். Read more