அஸ்வெசும திட்டத்தினால் பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கான மேன்முறையீடுகள், ஆட்சேபனைகள் என்பன ஒன்லைன் மூலம்  வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று பதிவு செய்யப்பட்டன. வவுனியா மாவட்டத்தின் தோணிக்கல் , கூமாங்குளம், மூன்றுமுறிப்பு , வெளிக்குளம் , கோவில்குளம் ஆகிய ஜந்து கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களின் மேன்முறையீடுகளும் ஆட்சேபனைகளும் இன்று  பதிவு செய்யப்பட்டன.  இதன்போது, 300-க்கும் மேற்பட்ட பயனாளிகள் தமது முறையீடுகளை முன்வைத்தனர்.