ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக சைக்கிளில் ஐஸ் கிறீம் விற்பனை செய்துவரும் மட்டக்களப்பு எரிவில் பாடசாலை வீதியைச் சேர்ந்த திரு. கந்தசாமி நடராசா என்பவருக்கு வாழ்வாதார உதவியாக ரூபா 25,000/- நிதியுதவி வழங்கியுள்ளார். எரிவிலைச் சேர்ந்த சமூக சேவையாளர் மஞ்சுளா அவர்களின் ஊடாக இவ்வுதவி பயனாளிக்கு வழங்கிவைக்கப்பட்டது.