இன்று எமது கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜுட்சன் அவர்களின் இல்லத்தில் கட்சியின் மகளிர் பிரிவு பிரதிநிதிகள், ஐந்து கிராம சேவகர் பிரிவிற்கு உட்பட்ட கட்சி அமைப்பாளர்கள், கட்சியின் இளைஞர் பிரிவு தலைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையிலான சந்திப்பு முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது கலைஞர் தவராசா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கட்சியின் பொருளாளரும் முன்னாள் வட மாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன் ( பவன்), கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் கரைதுரைபற்று முன்னாள் தவிசாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட இளைஞர் பிரிவு பொறுப்பாளர் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கட்சியின் வற்றாப்பளை வட்டார பொறுப்பாளராக புஷ்பராஜா, வற்றாப்பளை இளைஞர் பிரிவு பொறுப்பாளராக ச.சதீஸன், கேப்பாபிலவு பிரதேச பொறுப்பாளராக ராஜரட்ணம் (ரங்கன்) கேப்பாபிலவு இளைஞர் பிரிவு பொறுப்பாளராக விது, முள்ளியவளை வடக்கு அமைப்பாளராக கி.தவராசா,
முள்ளியவளை மேற்கு அமைப்பாளராக சஞ்சீவன் , முள்ளியவளை இளைஞர் பிரிவு பொறுப்பாளராக டஷ்விதன், முள்ளியவளை வடக்கு இளைஞர் பிரிவு பொறுப்பாளராக தர்சன், சிலாபத்துறை இளைஞர் பிரிவு பொறுப்பாளர் விக்டர்,
வற்றாப்பளை வட்டார ஆலோசகராக சி.வன்னியசிங்கம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.