Posted by plotenewseditor on 13 April 2024
Posted in செய்திகள்
சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக எதிர்வரும் 05 வருடங்களுக்குப் பணியாற்றுவதற்காக, கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு கூட்டத்தில் அவர் நிறைவேற்றுப் பணிப்பாளராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன்படி இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் 05 ஆண்டுகளுக்கு கிரிஸ்டலினா ஜோர்ஜியேவா சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளராக பணியாற்றுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.