இந்தியாவைப் போன்று இலங்கையிலும் மீன்பிடித் தடைக்காலத்தை அமுல்ப்படுத்த வேண்டும் என கடற்றொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. நேற்று முதல் எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை மீன்பிடித் தடைக்காலம் இந்தியாவில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் அந்த நடைமுறை பின்பற்றப்படாமை குறித்து அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா ஊடகத்திற்கு கூறுகையில், கடந்த 3 வருடங்களாக இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் எந்தவொரு அரசாங்கமும் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.
யுத்தத்திற்கு பின்னர் வடக்கு கடற்பரப்பில் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திணைக்களத்தினால் எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.