COVID தொற்றுக்குள்ளான பிரான்ஸ் நாட்டு பெண் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸிலிருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வருகை தந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளரும் வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருமான மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

62 வயதான குறித்த பெண் யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, அராலியில் தங்கியிருந்த நிலையில், காய்ச்சலினால் இரண்டு நாட்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சை பெற்றதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், அப்பெண் கடந்த வெள்ளிக்கிழமை (12)  சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர் கூறினார்.

அதற்கமைய, உயிரிழப்பிற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த பெண்ணுக்கு COVID தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.