ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)யின் திருகோணமலை மாவட்டக் குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டம் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், கூட்டணியின் இணைத்தலைவர்களுள் ஒருவரான சுரேஸ் பிரேமச்சந்திரன், கூட்டணியின் செயலாளர் ந.இரட்ணலிங்கம், கூட்டணியின் தேசிய அமைப்பாளர் கோ.கருணாகரம் (ஜனா), கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் இரா.துரைரெட்ணம், கூட்டணியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் க.சிவநேசன், வேந்தன் மற்றும் கூட்டணியின் திருகோணமலை மாவட்டக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது ஒவ்வொரு கட்சியிலும் இருந்து தலா மூன்று பிரதிநிதிகள் அடங்கலாக மாவட்டக்குழு உருவாக்கப்பட்டதுடன், மாவட்டக் குழுவின் இணைப்பாளராக பிரபாதரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.