03.10.18 செவ்வாய்கிழமை பள்ளியின் ஆசிரியர் திருமதி . சசிகலா தலைமையில் இடம் பெற்றது.
இவ்நிகழ்வில் புளொட் அமைப்பின் முக்கியஸ் தரும், முன்னை நாள் வவுனியா நகர பிதாவும், வடமாகாண சபை உறுப்பினருமான ஜி.ரி.லிங்கநாதன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், வவுனியா தெற்கு கல்வி வலய உதவி பணிப்பாளர் திரு.தர்மபால சிறப்பு விருந்தினராகவும், ஒய்வு பெற்ற முன்னாள் கோட்ட கல்வி அருள் வேல் நாயகி , பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர். இவ் நிகழ்வின் போது ஐந்து இலட்சம் (500,000) ரூபாய் பெறுமதியான சிறார்களுக்கான “விளையாட்டு முற்றம் “ வடமாகாணசபை உறுப்பினர் கெளரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாண சபையினால், நிதி முழுவதும் செலவிடப்பட்டுள்ளதாக, வட மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.
Gepostet von DAN News am Mittwoch, 3. Oktober 2018
