யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை வதிவிடம் கொண்ட திரு. முருகுப்பிள்ளை நல்லதம்பி (நல்லதம்பி அண்ணர்) அவர்கள் நேற்று (04.02.2022) வெள்ளிக்கிழ‌மை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

காந்தீயம் அமைப்பின் ஆரம்ப கால முக்கிய செயற்பாட்டாளரான இவர், பின்னர் கட்சியின் அரசியல் பணிகளில் தீவிரமாக செயற்பட்டு வந்தார்.

எமது கட்சி பங்கெடுத்த ஒவ்வொரு தேர்தலின்போதும் கட்சியின் தேர்தல் நிர்வாகப் பணிகளை அவரே பொறுப்பெடுத்து மிகவும் நேர்த்தியாக செய்துவந்தார்.

நல்லதம்பி அண்ணரின் இழப்பு அவரது குடும்பத்தினருக்கு மாத்திரமல்ல கழகத்திற்கும் எமது சமூகத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு எமது இதயபூர்வ அஞ்சலியை சமர்ப்பிக்கிறோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
05.02.2022.