Header image alt text

03.02.1985இல் சென்னையில் மரணித்த தோழர் குஞ்சி (பிரான்ஸிஸ் – புன்னாலைக்கட்டுவன்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

01.02.2022 வற்றாப்பளை, கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு கிராமத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக தமது வாழ்விடத்தை இழந்து நீண்ட போராட்டத்தின் மூலம் மீள்குடியேறி ஒரு முன்பள்ளியை உருவாக்கி அங்குள்ள சிறார்களுக்கு ஆசிரியையாக கற்பித்து வரும் யாழினி என்ற முன்பள்ளி ஆசிரியைக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 10,000/= வழங்கப்பட்டது. Read more

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read more

இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாக அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை, ராகம மருத்துவ பீட மாணவர்களை தாக்கியதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியின் முஸ்லிம் ஆசிரியையை இடமாற்றக் கோரி குறித்த பாடசாலையின் பெற்றோர் இன்று (03) வியாழக்கிழமை வலயக் கல்வி அலுவலகத்தினை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். Read more

யாழ்ப்பாணம் – மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு இன்றையதினம் மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அண்மையில் வத்திராயன் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு மீனவர்களின் உயிரிழப்புக்கு நீதி கோரியும் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராகவும் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. Read more

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார். Read more