Header image alt text

ஊடக அறிக்கை.

Posted by plotenewseditor on 9 February 2022
Posted in செய்திகள் 

இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. Read more

நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,263 ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 623,248 ஆக அதிகரித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குற்றச் சாட்டுகள் இன்றி பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறை மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்றுமாறும் வலியுறுத்தியுள்ளது. Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 27 ஆண்களும் 09 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை  15,692 ஆக அதிகரித்துள்ளது. Read more

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார். Read more

மன்னார் மற்றும் மடு வலய கல்வி பணிமனைக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியர்கள், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று (09) காலை 8.30 தொடக்கம் அடையாள கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். நிரந்தர நியமனம் மற்றும் சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி, மன்னார், நானாட்டான், மடு, முசலி மற்றும் மாந்தை மேற்கு பகுதிகளைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் இப்போரட்டத்தை முன்னெடுத்தனர். Read more