01.02.2022 வற்றாப்பளை, கேப்பாபிலவு, பிலக்குடியிருப்பு கிராமத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் இராணுவ ஆக்கிரமிப்பு காரணமாக தமது வாழ்விடத்தை இழந்து நீண்ட போராட்டத்தின் மூலம் மீள்குடியேறி ஒரு முன்பள்ளியை உருவாக்கி அங்குள்ள சிறார்களுக்கு ஆசிரியையாக கற்பித்து வரும் யாழினி என்ற முன்பள்ளி ஆசிரியைக்கு கழகத்தின் பிரான்ஸ் கிளைத் தோழர்களால் அனுப்பி வைக்கப்பட்ட ரூபா 10,000/= வழங்கப்பட்டது.

இதில் கழகத்தின் பொருளாளர் தோழர் பவான், தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர், மாவட்டச் செயலாளர் யூட்சன், கலைஞர் தவராசா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இவ்வுதவியை வழங்கிய பிரான்ஸ் கிளைத் தோழர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.