Header image alt text

வவுனியா காத்தார் சின்னக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

IMG_0119 IMG_0085  IMG_0099  IMG_0112தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை 4.00 மணியளவில் வவுனியா காத்தார் சின்னக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களும் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வெற்றிபெற வேண்டுமென்றும், இதற்கு ஒட்டுமொத்த தமிழ் மக்களும் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னத்திற்கே வாக்களிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டதுடன், வட மாகாணசபை நிர்வாகம், அதற்குள்ள அதிகாரங்கள் தொடர்பிலும் விளக்கமளித்துள்ளார்.

ஆனைக்கோட்டை, பாசையூர் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்-

2013-09-14 17.18.46anaikottai 2013-09-14 17.36.25 Anaikottai Kajatheepan 2013-09-14 17.49.07anaikottai Stயாழ். ஆனைக்கோட்டை, உயரப்புலம் பாரதி சனசமூக நிலையத்தில் இன்றுமாலை 5.00மணியளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்  தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்ததன், பா.கஜதீபன் ஆகிய இருவரையும் ஆதரித்து ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம் வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கணேசவேல் தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், பா.கஜதீபன். ஆகியோரும், வலி தென்மேற்கு பிரதேச சபை உப தவிசாளர் சிவகுமார், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர் கௌரிகாந்தன் ஆகியோரும், ஊர்ப் பிரமுகர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்றுமாலை 6.45மணியளவில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டமொன்று இடம்பெற்றது.

2013-09-14 18.50.37paasaiyoor 2013-09-14 18.54.58 pasaiyoor thurairatnsingm 2013-09-14 18.55.11Pasaiyoor 2013-09-14 19.13.34 sri kanthaஇக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், என்.சிறீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள், திருகோணமலை மாவட்ட முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள் இதன்போது முன்னைநாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி என்.சிறீகாந்தாவினால் தயாரிக்கப்பட்ட உடையும் விலங்குகள் என்கிற பாடல் இறுவெட்டும் வெளியிடப்பட்டது. இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

சுழிபுரம், சங்கானைப் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

2013-09-13 18.03.23periya pilavu chulipuram (1) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (3) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (4) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (5) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (6) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (7) 2013-09-13 18.03.23periya pilavu chulipuram (8)யாழ். சுழிபுரம் பெரியபுலவு அண்ணா சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

2013-09-13 19.42.14sanganai 2013-09-13 19.43.09sanganaiஇதேவேளை இன்றுமாலை சங்கானைப் பிரதேசத்திலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளர்களான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம், சர்வேஸ்வரன், அனந்தி, கஜதீபன். ஆனோல்ட், குகதாசன் மற்றும் வலி மேற்கு பிரதேச சபைத் தலைவர் திருமதி நாகரஞ்சினி ஐங்கரன், திருகோணமலை நகரசபைத் தலைவர் செல்வராஜா ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பெருமளவு பொதுமக்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். 

ஒற்றையாட்சிக்குள் நியாயமான தீர்வினை எதிர்பார்க்க முடியாது- திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Captureயாழ்ப்பாணம் வலி.வடக்கில் சுவீகரிக்கப்பட்ட காணிகள் எதிர்காலத்தில் சிங்களக் குடியேற்றங்கள் அமைப்பதற்குப் பாவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ள புளொட் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கில் குடிப்பரம்பலை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவயிலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடமாகாண சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் தற்போது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதை காண முடிகின்றது. கூட்டமைப்பின் வெற்றிக்காக அதிகளவில் வாக்களிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு மக்கள் வந்துள்ளதாக நாம் அறிகின்றோம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வெற்றி பெற வேண்டும் என்பதே மக்களின் விருப்பமாகவும் இப்போது உள்ளது.

நாங்கள் செல்லும் இடங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பாரிய ஆதரவு இருந்தாலும், அவர்களுடைய வாக்கு வீதத்தை பெறுவதில் தான் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். வழக்கமாக 50 – 55 வீதம்தான் தமிழ் மக்களுடைய வாக்குவீதம் இருந்தது. ஆனால் இதனை 75 வீதமாக அதிகரிக்க வேண்டும்.

இலங்கையில் ஒற்றையாட்சியின் கீழ் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் சிறந்த தீர்வினை வழங்க முடியாது. ஒற்றையாட்சிக்குள் ஒரு நியாயமான தீர்வினை எதிர்பார்க்கவும் முடியாது. சமஷ்டி முறையிலான ஒரு தீர்வே தமிழ் மக்களுக்கு நியாயமானதாக அமையும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும் கவனம் செலுத்துகின்றது. Read more

வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் கருத்தரங்கு-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான கருத்தரங்கு நேற்றுமாலை வவுனியா கோவில் குஞ்சுக்குளத்தில் இடம்பெற்றது. வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளருமான ஜி.ரி லிங்கநாதன் (விசு) அவர்களும், ஊர்ப் பிரமுகர்களம் இக்கருத்தரங்கில் உரையாற்றினார்கள். இக் கருத்தரங்கில் வேட்பாளரின் நண்பர்களும், ஆதரவாளர்களும், பொதுமக்களுமென பலர் கலந்து கொண்டிருந்தனர். இதேவேளை வவுனியா சுந்தரபுரம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புளொட் வேட்பாளர்களான வவுனியா நகரசபையின் முன்னைநாள் தலைவர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு), வவுனியா நகரசபையின் முன்னைநாள் உப தலைவர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) ஆகியோரின் மக்கள் சேவைகள், அவர்கள் வட மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட வேண்டியதன் அவசியம் குறித்ததுமான தெருவெளி நாடகமொன்றும் நேற்றையதினம் மாலை இடம்பெற்றுள்ளது.

நாவாந்துறை, அராலி பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரை கூட்டம்-

2013-09-12 18.46.47Navanthurai (1)யாழ். நாவாந்துறைப் பகுதியில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் தொடர்பான மாபெரும் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. திரு. ஜேக்கப் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா மற்றும் யாழ் மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் பிரதேச சபை தலைவர்கள், அங்கத்தவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

வலி தெற்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரம்-

2013-09-11 17.40.56 2013-09-11 17.43.06 2013-09-11 17.47.43 2013-09-11 18.08.45 2013-09-11 18.11.14யாழ்ப்பாணம் வலி தெற்கு உடுவில், மள்ளுவம் பகுதியிலும், கோண்டாவில் பகுதியின் தாவடி கிழக்கிலும் நேற்றையதினம் மாலை தமிழ் தேசியக் கூடடமைப்பின் இரு தேர்தல் கருத்தரங்குகள் இடம்பெற்றுள்ளன. இக்கருத்தரங்குகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், வலி தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரகாஸ் மற்றும் ஊர்ப் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தனர். இக் கருத்தரங்குகளில் பிரதேசத்தைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர்களும், முதியோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர். இங்கு உரையாற்றிய அனைவரும், வட மாகாணசபைத் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும்பான்மை வெற்றி பெறுவதனை உறுதிசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

மல்லாவியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம்-

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று முன்தினம் (10.09.2013) முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி சிவன்கோவில் வளாகத்தில் இடம்பெற்றது. மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் திரு. தனிநாயகம் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம் ஆகியோரும் முள்ளியவளையின் மூத்த அரசியல் பிரமுகர் முத்து சுப்பிரமணியம் அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வேட்பாளர்களும் உரையாற்றினார்கள். இங்கு உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட புளொட் வேட்பாளர் கந்தையா சிவநேசன் (பவன்) அவர்கள், Read more

வவுனியா நெடுங்கேணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பொதுக்கூட்டம்-

IMG_7286 nedunkerny TNA meeting Sept 11 -2013 (1) nedunkerny TNA meeting Sept 11 -2013 (2) nedunkerny TNA meeting Sept 11 -2013 (3)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று வவுனியா நேடுங்கேணியில் இடம்பெற்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட வேட்பாளர்களும் இக்கூட்டத்தில் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் உள்ளுராட்சிசபை தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், ஊர்ப் பிரமுகர்கள் ஆதரவாளர்கள் என பெருமளவிலானோர் கலந்து கொண்டிருந்தனர். வேட்பாளர் அறிமுகமும் இதன்போது இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட புளொட் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களின் இல்லத்தில், கூட்டமைப்பின் வேட்பாளர் ஜி.ரி.லிங்கநாதன் (விசு) அவர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழு தலைவர் இரா.சம்பந்தன், வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி விக்னேஸ்வரன் ஆகியோருக்குமிடையிலான தேர்தல் குறித்த விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

பூக்குளத்திற்கு 30ஆண்டுகளின் பின்னர் வாக்களிப்பு நிலையம்-

30 வருடங்களின் பின்னர் புத்தளம் மாவட்டத்தின் பூக்குளம் மீனவர் கிராமத்தில் முதன்முறையாக வாக்களிப்பு மத்திய நிலையம் ஒன்று அமைக்கப்படுவதாக புத்தளம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி கிங்சிலி பெனாண்டோ தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டத்தில் வடக்கு முனையிலுள்ள இறுதி கிராமம் இதுவாகும்.

தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 382 முறைப்பாடுகள்-

தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் 382 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. குருநாகல் மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் முறைப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. வன்முறைகள் தொடர்பில் 41 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. அரச வளங்கள் தேர்தல் பிரச்சாரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலும் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இதில் அரச ஊழியர்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறித்து கூடுதல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று தேர்தல் முறைப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜப்பானிய துணை அமைச்சர் இலங்கை விஜயம்-

ஜப்பான் நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரங்கள் தொடர்பான துணை அமைச்சர்  மினோரு கியுச்சீ  இருநாள் விஜயமொன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அரசாங்க இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிடையேயான இராஜதந்திர உறவினை வலுப்படுத்துவதே இந்த விஜயத்திற்கான நோக்கம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின்போது ஜப்பான் துணை அமைச்சர் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உட்பட பல முக்கிய பிரமுகர்களை சந்திப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

பொதுநலவாய தலைவர்கள் மாநாட்டில் ஆஸி பிரதமர் பங்கேற்பு-

இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் டொனி அபொட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது புதிய பிரதமரை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்தியுமுள்ளார். இறுதியாக பொதுநலவாய தலைவர்களின் மாநாடு கடந்த 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் பேர்த்தில் நடைபெற்றது. இது தொடர்பில் இலங்கைக்கு உதவும் பொருட்டு இறுதி மாநாட்டின் ஏற்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள் ஜூன்மாதம் இங்கு வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுநலவாய மாநாட்டுக்கு வெளிநாட்டு பாதுகாப்பு அணி வராது-அமுனுகம

பொதுநலவாய உச்ச மாநாட்டுக்கு வருகைதரும் நாடுகளின் தலைவர்களுடன் மேலதிக வெளிநாட்டு பாதுகாப்பு அணி எதுவும் இலங்கைக்கு வராதென வெளிவிவகார அமைச்சின் செயலர் கே.அமுனுகம தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜகத் ஜயசூரியவின் தலைமையிலான விசேட இலங்கை பாதுகாப்பு குழு, பாதுகாப்பு ஏற்பாடுகளை பொறுப்பேற்றுள்ளதால் வழமையான பிரத்தியேக பாதுகாப்பு ஒழுங்குமுறைக்கு அப்பால் மேலதிக பாதுகாப்பு எதிர்ப்பார்க்கப்படமாட்டாதென அனுமுனுகம குறிப்பிட்டுள்ளார். முப்படைகளின் விசேட செயலணியும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். பொதுநலவாய நாடுகளின் 54 தலைவர்கள் அல்லது பிரதிநிகள் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு நவம்பர் 10ஆம் திகதிக்கும் 17ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.