கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தினர் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கலந்துரையாடல்-
யாழ். கைதடி மத்தி விநாயகர் சனசமூக நிலையத்தில் இன்றுமாலை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உ0றுப்பினர் திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விசேட கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளார். விநாயகர் சனசமூக நிலையத்தின் தலைவர் செல்லையா மயூரன் அவர்களும், சனசமூக நிலைய நிர்வாக உறுப்பினர்களும், பொதுமக்களும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். இதன்போது அந்தப் பகுதியின் நிலைமைகள் தொடர்பிலும், பிரதேசத்தில் நிலவும் தேவைகள், குறைபாடுகள் பற்றியும் மாகாணசபை உறுப்பினர் திரு. சித்தார்த்தன் அவர்கள் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. திரு. பிரகாசன் கஜவர்ணன் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின்போது வட மாகாணசபையின் அதிகாரங்கள், செயற்பாடுகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.