Header image alt text

வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்துரையாடல்-

யாழ்.பருத்தித்துறை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் உள்ளிட்ட சனசமூக நிலைய அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுபகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். கலைமணி சனசமூக நிலைய தலைவர் ரட்ணவடிவேல் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக் கலந்துரையாடலின்போது பிரதேச மக்களின் குறைநிறைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவு தந்து வாக்களித்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் நனறியினைத் தெரிவித்துக் கொண்டார்கள். Read more

அல்வாய் வடமத்தி பிரதேச நிலைமைகள் தொடர்பில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மக்களுடன் கலந்துரையாடல்-

1 (2)யாழ்ப்பாணம் அல்வாய் வடமத்தி குமுதெனி சனசமூக நிலையத்தில் சனசமூக நிலைய தலைவர் உள்ளிட்ட அங்கத்தவர்கள், ஊர்ப் பிரமுகர்கள் மற்றும் விளையாட்டுக் கழகத்தினர் ஆகியோரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் இன்றுமுற்பகல் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். Read more

காணாமல் போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் வவுனியாவில் இம்மாதம் மாபெரும் தீப்பந்த ஊர்வலத்துக்கு ஏற்பாடு.

SAM_9835 SAM_9836காணாமல் போனோர் தொடர்பில் அரசை பொறுக்கூற வைப்பதற்கும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை விரைவுபடுத்துவதற்கும் ஜனநாயக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தலைமை கட்டடத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. Read more

குடாநாட்டில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்கு தூபமிடப்படுகிறது-தர்மலிங்கம் சித்தார்த்தன்-

Sithar ploteஉயர் பாதுகாப்பு வலயங்களாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை குடாநாட்டின் இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்ட செயற்பாடுகளுக்கு பயன்படுத்த தூபமிடப்படுகின்றது.

இதனை அரசாங்கம் உடனடியாக நிறுத்தவேண்டும் என புளொட் அமைப்பின் தலைவரும் வட மாகாணசபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் வலி வடக்கில் காங்கேசன்துறை தொகுதி முழுவதும் உள்ளடங்கலாக இளவாலை வரையில், சுற்றியுள்ள நிலப்பரப்பினை இராணுவம் தமக்குள் வைத்துள்ளது, Read more

நியூசிலாந்து, அவுஸ்திரேலிய எம்.பிக்கள் விடுதலை-

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும், விசா சட்டத்தை மீறி கொழும்பில் ஊடகவியலாளர் மாநாட்டை நடத்த முயன்றனர் என்ற குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜேன் லொஜ்ஜி மற்றும் அவுஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் செனற்றர் லீ ரிகியோனன் ஆகிய இருவருமே தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் நாட்டைவிட்டு வெளியேற இணங்கியமையை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குடியகல்வு, குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளைச் சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்திருந்தனர். 

பொதுநலவாய இளைஞர் மாநாடு ஆரம்பம்-

பொதுநலவாய இளைஞர் மாநாடு இன்று முற்பகல் அம்பாந்தோட்டை, மாகம் ரு{ஹணுபுர சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா ஆகியோரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. ஒன்பதாவது தடவையாக நடைபெறவுள்ள பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் 44 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 200 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர். அபிவிருத்திக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் இளைஞர் மாநாடு நடைபெறுகின்றது.

யுனெஸ்கோ உப தலைவராக கருணாரத்ன தெரிவு-

யுனெஸ்கோ எனப்படும் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின் உப தலைவராக இலங்கை பிரதிநிதி பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பிரான்ஸில் நடைபெற்ற யுனெஸ்கோவின் 37ஆவது பொதுச்சபைக் கூட்டத் தொடரின்போது அவர் உப தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை பல்வேறு துறைகளில் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் இக்கூட்டத் தொடரின்போது பேராசிரியர் கருணாரத்ன ஹங்கவத்த உரையாற்றியுள்ளார்.