Header image alt text

‘வணக்கம்’ நீக்கப்பட்டது ஏன்? 

welcome_signபொதுநலவாய மாநாட்டு இலட்சினையில் ‘வணக்கம்’ என்ற பதத்தை நீக்கிவிட்டு ‘ஆயுபோவன்’ என்ற சிங்களப் பதத்தை தமிழில் எழுதப்பட்டது ஏன்? என்று வெளிநாட்டு தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அந்தக் குழுவில் தான் இல்லை என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பதிலளித்து நழுவினார். 
பொது நலவாய மாநாட்டு இலட்சினையில் அழகான தமிழில் ‘வணக்கம்’ என்று எழுதப்பட்டிருந்ததற்கு மேலாக ‘ஆயுபோவன்’ என்ற சிங்கள வார்த்தை தமிழில் ஒட்டப்பட்டுள்ளது. இது ஏன் என்று அந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு ஒரே வரியில் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா பதிலளித்த பின்னர் அநுர பிரியதர்ன யாப்பா அந்த ஊடகவியலாளரைப் பார்த்து ‘நீங்கள் வேண்டுமென்றே இந்தக் கேள்வியை எழுப்புகின்றீர்கள்’ என்று குறிப்பிட்டார்.
இலங்கையில் தமிழ் மக்களின் மொழி உரிமை மறுக்கப்படுவதற்கு உதாரணமாக பொதுநலவாய மாநாட்டில் தமிழில் வணக்கம் என்று எழுதப்படுவதற்குப் பதிலாக ஆய்போவன் என்று எழுதப்பட்டிருந்தது என்று கருதிய வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் அரசாங்கம் இதற்கு பதில் அளிக்கத் தவறியுள்தாகவும் குறிப்பிட்டனர்

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவு புதிய தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

n-1பொதுநலவாய அரச தலைவர்களின் உச்சி மாநாடு இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டுடன் நிறைவடைந்தது. 53 நாடுகள் அங்கம்வகிக்கும் பொதுநலவாய அமைப்பிற்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டுள்ளார். பொதுநலவாய அமைப்பின் மாநாட்டை மிகக் கோலாகலமாக நடத்தியமைக்கு உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். Read more

சுழிபுரம் பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத் திறப்புவிழா-

unnamedயாழ். சுழிபுரம் பாரதி முன்னிலைப் பள்ளியின் கட்டிடத் திறப்புவிழா நேற்றுமாலை இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா அவர்கள் கலந்து கொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபைத் தலைவர் நாகரஞ்சினி ஐங்கரன் அவர்களும் பங்கேற்றிருந்தார்.

இதன்போது பாரதி முன்னிலைப் பள்ளியின் பழைய மாணவ, மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இங்கு விசேட அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், தற்போது லண்டனில் வசிக்கும் இதே ஊரைச் சேர்ந்த ரவிசங்கர் அவர்கள் அங்கிருந்து இங்கு வந்தபோது இந்த பாரதி முன்னிலைப்பள்ளி கட்டிடத்திற்கென பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து இக் கட்டிடத்தைக் கட்டிக் கொடுத்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரரின் நினைவாக அதனை அவர் செய்துள்ளார்.  Read more

வவுனியாவில் தீப்பந்த போராட்டம்-

staged-a-candle-vigilகாணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி வவுனியாவில் இன்று தீப்பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட காணாமல் போனவர்களை தேடும் உறவுகள் சங்கமும், பிரஜைகள் குழுவுமே இணைந்து இந்த போராட்டத்தை நடத்தியுள்ளது. வவுனியா கந்தசுவாமி கோவில் வீதியிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த பலரும் பங்கேற்றிருந்தனர்.

சவேந்திர சில்வாவுடன் விவாதிக்க தயார்; கெலும் மக்ரே-

ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வாவுடன் எந்த நேரத்திலும் விவாதம் நடத்த தான் தயாராக உள்ளதாக சனல் 4 ஊடகவியலாளர் கெலும் மக்ரே அறிவித்துள்ளார். அதன்படி சனல்4 ஆவணப்பட தயாரிப்பாளர் கெலும் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி சவேந்திர சில்வா ஏற்கனவே தெரிவித்திருந்தார். இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கெலும் மெக்ரே தயாரித்துள்ள ஆவணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார். ஏற்கனவே சனல்4 ஆவணப்படம் ஒன்று நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள் உரையாற்றுமாறு ஐ.நாவிற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளாது இந்நிகழ்வுக்கு சவேந்திர சில்வாவே பொருத்தமானவர் என கோஹன குறிப்பிட்டிருந்தார்.

24ஆவது பொதுநலவாய மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானம்-

2015ஆம் ஆண்டு நடைபெறவிருக்கின்ற 24 ஆவது பொதுநலவாய மாநாட்டை தென் ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டாவில் நடத்துவதற்கு பொதுநலவாய தலைமை இன்று முடிவு செய்துள்ளது. அடுத்த மாநாடு மொரீசியஸில் நடத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் மொரீசியஸ் பிரதமர் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்ததுடன் அடுத்த மாநாட்டை தனது நாட்டில் நடத்தமாட்டேன் என்று அறிவித்திருந்தார். இதனையடுத்தே அடுத்த  மாநாட்டை மால்டாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்துக்கு இலங்கை யானை பரிசளிப்பு-

இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை அரசாங்கத்துக்கு துணையாக செயற்படும் நியூசிலாந்துக்கு இலங்கை யானை ஒன்றை பரிசாக வழங்கவுள்ளது. கொழும்பில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பொதுநலவாய நாடுகளின் மாநாடு தொடர்பான நியூசிலாந்தின் நிலைப்பாட்டை இலங்கை பாராட்டியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புச் சின்னமாக இலங்கை அரசு நியூசிலாந்துக்கு யானையை வழங்கியுள்ளது.

அரச தலைவர்களுக்கு இடையில் சந்திப்பு-

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை தாமரை தடாகம் மஹிந்த ராஜபக்ஸ கலையரங்கில் இந்த மாநாடு ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து பொதுநலவாய அரச தலைவர்கள் பல்வேறு சந்தர்பங்களிலும் சந்தித்து கருத்துக்களை பறிமாறிக்கொண்டுள்ளனர். இதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ள அரச தலைவர்களுக்கு இடையில் இன்று முற்பகல் சிநேகப்பூர்வ சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

300 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்;-குடிவரவு குடியகல்வு திணைக்களம்-

கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர் இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதுடன் இவர்களில் இந்திய மற்றும் பாகிஸ்தானியர்களே நாடு கடத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட பலரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.